இயற்கை மூலிகைகளைக் கொண்டு உங்களுடைய தீவிரமான மூச்சுப் பிரச்சினைகளை சரி செய்யலாம்....

இயற்கை மூலிகைகளைக் கொண்டு உங்களுடைய தீவிரமான மூச்சுப் பிரச்சினைகளை சரி செய்யலாம்....

காற்று மாசுபாடு, மோசமான சுற்றுச்சூழல், தூசிகள் ஆகியவற்றின் காரணமாகவும் நுரையீரலில் தேங்கும் அதிகப்படியான மற்றும் நாள்பட்ட சளியின் காரணமாகவும் மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் ஆஸ்துமா பிரச்சினைகள் உண்டாகும். இந்த ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் குளிர்காலத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். என்ன தான் மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் ஆஸ்த்மா அறிகுறிகள் குளிர்காலத்தில் சற்று அதிகமாகவே இருக்கும். இநனை சரிசெய்ய வீட்டிலுள்ள சில இயற்கையான மூலிகைப் பொருள்களைக் கொண்டு சில பானங்களை செய்து அருந்துவதால் குளிர்காலத்தில் உண்டாகும் ஆஸ்துமா அறிகுறிகளை கட்டுப்படுத்தலாம்.

ஆஸ்துமா என்பது நாள்பட்ட சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. சுவாசப் பாதைகளில் ஏற்படும் வீக்கம், சுவாசப் பாதை குறுக்கத்தினாலும் மூச்சுத் திணறல்கள் ஏற்படுவதுண்டு.

இஞ்சியும் அதிமதுரமும் :

தேவையான பொருள்கள் :

அதிமதுரம் - 1 ஸ்பூன்,
இஞ்சி - 1 துண்டு,
தண்ணீர் - 1 கப்

செய்முறை :

தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் இஞ்சியைத் தோல் சீவி விட்டு துருவி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இஞ்சியின் சாறு நன்றாக நீருக்குள் இறங்கியதும் அதில் அதிமதுரப் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். வேராக இருந்தால் நன்றாக இடித்துச் சேர்த்துக் கொள்ளவும்.

இதை நன்கு கொதிக்க வைத்து டீயாகக் குடிக்கலாம். அதிமதுரத்தில் ஆன்டி - இன்பிளமேட்டரி பண்புகள் அதிகம். இந்த டீயை தினமும் ஒரு முறையாவது குடித்து வர ஆஸ்துமா அறிகுறிகள் குறையும்.

இலவங்கப்பட்டை - தேன் குடிநீர் :

தேவையான பொருள்கள் :

இலவங்கப்பட்டை - 1 ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
திரிகடுகம் - அரை ஸ்பூன்
தண்ணீர் - ஒன்றரை கப்

செய்முறை :

ஒன்றரை கப் தண்ணீரை நன்றாகக் கொதிக்க விட்டு அதில் எடுத்து வைத்திருக்கும் இலவங்கப்பட்டை பொடியோடு திரிகடுகம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

ஒன்றரை கப் நீரானது ஒரு கப் அளவுக்கு குறைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அது வெதுவெதுப்பான நிலைக்கு வந்தபின் தேன் கலந்து குடிக்கலாம்.

இந்த டீயை ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்து வந்தால் ஆஸ்துமா அறிகுறிகள் குறையும்.

மஞ்சள் மற்றும் இஞ்சி :

தேவையான பொருள்கள் :

பால் - ஒரு டம்ளர்,
மஞ்சள் - கால் ஸ்பூன்,
இஞ்சி - 1 துண்டு

செய்முறை :

பாலை காய்ச்சி வெதுவெதுப்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.

இஞ்சியை தோல் சீவி துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இஞ்சி துருவலை வெதுவெதுப்பான பாலில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அதோடு மஞ்சள் தூளை சேர்த்து கலந்து இரவு தூங்கச் செல்லும்முன் குடித்து வர ஆஸ்துமா கட்டுக்குள் வரும்.

இஞ்சிக்கு பதிலாக சுக்குப் பொடியும் சேர்த்துக் கொள்ளலாம். சிறுவர்களுக்கு சளித் தொல்லை இருந்தால் இந்த பாலோடு பனங்கற்கண்டு சேர்த்து கொடுக்கலாம்.

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் க்ரீன் டீ :

தேவையான பொருள்கள் :

க்ரீன் டீ பவுடர் (அ) பேக் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

செய்முறை :

ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, எடுத்துக் கொள்ளுங்கள். அதில் க்ரீன் டீயை போட்டு 3-5 நிமிடங்கள் வரை மூடி வைத்து விடுங்கள்.

பின் இந்த க்ரீன் டீயை குடிக்கலாம். இதில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் ஆன்டி இன்பிளமேட்டரைி பண்புகளும் உள்ளதால் நுரையீரலில் உள்ள தொற்றுக்களை சரிசெய்ய உதவி செய்யும். இந்த க்ரீன் டீயை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் பலப்படும். அதனால் ஆஸ்துமா அறிகுறிகளைக் கட்டுப்படுத்த முடியும்.

சோம்பு - புதினா டீ :

தேவையான பொருள்கள் :

சோம்பு - 1 ஸ்பூன்
புதினா இலைகள் - 10-15
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

செய்முறை :

ஒரு கப் சூடான நீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீரில் சோம்பை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

சோம்பிலுள்ள சத்துக்கள் முழுமையாக நீருக்குள் இறங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு அதை மூடி வைத்து விடுங்கள்.

அந்த நீரில் புதினாவையும் சேர்த்து மூடி வையுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து இதை வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்க வேண்டியது தான்.

புதினாவில் அதிகப்படியான அளவு ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் மற்றும் ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நுரையீரல் தொற்றுக்களைக் குறைத்து ஆஸ்துமா அறிகுறிகளையும் மூச்சுக்குழல் தொடர்பான பிரச்சினைகளையும் சரிசெய்ய உதவுகிறது.