Natural Fairness Cream

ரோஜா இதழ் போல உங்களுடைய சருமம் மென்மையாகவும் பிங்க் நிறமாகவும் மாறுவதற்கு இந்த ஒரு கிரீம் போதும்!!

இரண்டு கன்னத்திலும் ஆப்பிளை வெட்டி வைத்தவாறு ஒரு அழகு தேவை என்பவர்கள் தினமும் இந்த கிரீமை பயன்படுத்தி வாருங்கள். உங்களுடைய சரும நிறத்திற்கு ஏற்ப ஒரு சில மாதங்களில் உங்களுடைய நிறத்தில் நல்ல வித்தியாசத்தை காணலாம். வெள்ளையாவதற்கு கடைகளில் நிறைய கிரீம் விற்கிறது.

 ஆனால் அந்த கிரீமில் எல்லாமே செயற்கையாக கலக்கப்படும் கெமிக்கல் ஏராளம். அப்படி இல்லாமல் நம்முடைய வீட்டிலேயே நம் கையாலேயே சூப்பரான ஒரு ஃபேர்னஸ் கிரீமை தயாரிப்பது எப்படி என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

ஒரு சிறிய பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆலோவேரா ஜெல் – 1 டேபிள் ஸ்பூன், ரோஸ் வாட்டர் – 1 டேபிள் ஸ்பூன், பாதாமாயில் – 1 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன், வைட்டமின் – E கேப்ஸ்யூல் – 1 உள்ளே இருக்கும் ஜெல் மட்டும், ரோஸ் எசன்ஷியல் ஆயில் – 2 சொட்டு, இந்த பொருட்களை எல்லாம் போட்டு ஒரு ஸ்பூனை வைத்து நன்றாக அடித்து கலக்கினால் வெள்ளை நிறத்தில் நமக்கு ஒரு ஜெல் கிடைக்கும்.

இந்த ஜெல்லை அப்படியே ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் இரண்டு வாரம் வரை கெட்டுப் போகாது. இதை முகத்தில் எப்படி அப்ளை செய்வது. தினம்தோறும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு உங்களுடைய முகத்தை நன்றாக கழுவி விட்டு துடைத்து விடுங்கள். அதன் பின்பு இந்த ஜெல்லை தொட்டு உங்களுடைய முகம் முழுவதும் ஆங்காங்கே சிறு புள்ளிகள் ஆக வைத்து அப்படியே தடவி விடுங்கள். ஜென்டில் ஆக இரண்டு நிமிடம் மசாஜ் செய்து அப்படியே விட்டு விடுங்கள். இரவு முழுவதும் முகத்தை கழுவ வேண்டாம்.

மறுநாள் காலை எப்போதும் போல உங்களுடைய முகத்தை கழுவி கொள்ளுங்கள். தினமும் இந்த கிரீமை அப்ளை செய்து வர உங்களுடைய சருமத்தின் நிறம் படிப்படியாக கூடத் தொடங்கும். சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும் முகம் பொலிவு பெறும். (ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் இந்த குறிப்பை பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் எழும். உங்களுக்கு ரொம்பவும் ஆயில் ஸ்கின் ஆக இருந்தால் தேங்காய் எண்ணெயை இந்த குறிப்புக்கு சேர்க்க வேண்டாம்.)

அலோவேரா ஜெல்லை கடையிலிருந்து வாங்கினால் கொஞ்சம் கவனமாக வாங்க வேண்டும். கலர் சேர்க்காத வாசனை திரவியம் சேர்க்காத ஆலோவேரா ஜெல்லாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். பிரஷான கற்றாழை ஜெல், ஃபிரான ரோஸ் வாட்டர் இவைகளை குறிப்புக்கு பயன்படுத்துவது முழு பலனையும் கொடுக்கும்.

இந்த குறிப்புக்கு பயன்படுத்தும் பாதாம் ஆயில் தேங்காய் எண்ணெய் கூட மரச் செக்கில் செய்த எண்ணெயாக இருந்தால் மிகவும் சிறப்பு. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. மூன்று மாதத்தில் முக அழகில் நம்ப முடியாத அளவிற்கு மாற்றம் தெரியும்.

கடைகளில் கிடைக்கும் செயற்கையான ஃபேர்னஸ் கிரீமை பயன்படுத்தும் போது நம்முடைய முகம் இன்ஸ்டன்ட் ஆக ஒரு சில நாட்களிலேயே வெள்ளையாக மாறும். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் ஃபேர்னஸ் கிரீமை எப்போது நிறுத்துகிறீர்களோ, அப்போதே உங்களுடைய முகம் சுருக்கமாகி, சீக்கிரம் கருப்பாகி, பொலிவு இழப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. பக்க விளைவுகள் ஏராளம் ஏற்படும். அதனால் ஃபேர்னஸ் கிரீமை பயன்படுத்துவதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை யோசித்து விட்டு அதன் பின்பு பயன்படுத்த வேண்டும்.