நீங்கள் diabetes நோயாளியா? அப்போ இந்த மூலிகை மசாலாவை ட்ரை பண்ணுங்க...

நீங்கள் diabetes நோயாளியா? அப்போ இந்த மூலிகை மசாலாவை ட்ரை பண்ணுங்க...

 பொதுவாக மஞ்சள் நமது சருமம் மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு நோயாளிகள் மஞ்சளை எவ்வாறு உட்கொள்ளலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

நீரிழிவு நோயாளிகளுக்கு மஞ்சளின் நன்மைகள்: மஞ்சள் ஒவ்வொரு வீட்டிலும் எளிதாகக் கிடைக்கக்கூடிய ஒரு மூலிகை மசாலா பொருளாகும். இது நமது உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பார்கள்.  அதேபோல் இந்த மஞ்சள் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இது மட்டுமின்றி, மஞ்சள் மசாலா பொருளானது சர்க்கரை நோய்க்கும் நல்லது என்று கருதப்படுகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக மஞ்சளை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுத்தப்படுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் மஞ்சளை எப்படி உட்கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நீரிழிவு  நோயாளிகளுக்கு மஞ்சள் எவ்வாறு பயன் தரும்?

நீரிழிவு நோயாளிகளுக்கு மஞ்சள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மஞ்சளில் நல்ல அளவு குர்குமின் உள்ளது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு மஞ்சள் மிகவும் பயமின் தரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதன்படி நீரிழிவு நோயில் மஞ்சளை உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நீரிழிவு அல்லது சர்க்கரை நோயாளிகள் இந்த மூன்று முறைகளில் மஞ்சளை உட்கொள்ளலாம்-

மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை :

 நீரிழிவு நோயாளிகள் மஞ்சளுடன் இலவங்கப்பட்டையை உட்கொள்ளலாம். இதை உட்கொள்ள, ஒரு கிளாஸ் பாலில் மஞ்சள், இலவங்கப்பட்டை தூள் கலந்து சூடாக்கவும். காலை உணவில் இந்த பாலை உட்கொள்ளலாம். மஞ்சளுடன், இலவங்கப்பட்டை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு :

 கருமிளகுடன் மஞ்சள் சேர்த்து உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். நீரிழிவு நோயாளிகள் மஞ்சள் கருப்பு மிளகை மற்றும் பாலுடன் கலந்து குடிக்கலாம். இதற்கு ஒரு கிளாஸ் பாலில் மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு தூள் சேர்த்து கலக்கவும், இப்போது அதை சூடுபடுத்தி குடிக்கவும். 

மஞ்சள் மற்றும் நெல்லிக்காய் : 

நீரிழிவு நோயாளிகளுக்கும் மஞ்சள் மற்றும் நெல்லிக்காய் சேர்த்து சாப்பிட்டால் நன்மை பயக்கும். நெல்லிக்காயில் நல்ல அளவு வைட்டமின் சி உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதற்கு நெல்லிக்காய் பொடி மற்றும் மஞ்சளை கலந்து தண்ணீர் சேர்த்து பருகலாம். இந்த கலவை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.