சிறுநீர் கலங்கலா போகுதா?

சிறுநீர் கலங்கலா போகுதா? 

இதோ இந்த வைத்தியம் ட்ரை பண்ணுங்க!

சிறுநீர் நீரிழப்பு அல்லது சிறுநீர் பாதை நோய்த்தொற்று போன்றவை மேகமூட்டமாக இருப்பதற்கான முதன்மை காரணங்கள் ஆகும். இந்த நோய்த் தொற்றுகள் வலியுடன் இருக்கலாம். அல்லது வலி இல்லாமல் இருக்கலாம். இதற்கு உடனடி சிகிச்சை அளிகப்படாவிட்டால் உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வேறு எந்தவிதமான அறிகுறிகளும் இல்லாமல் ஒரு மேகமூட்டமான சிறுநீர் தொற்று அதன் ஆரம்ப கட்டத்தை குறிக்கிறது. ஆரம்ப கட்டத்தில் வலுவான நுண்ணுயிர் எதிர்புகளுடன் நம் உடலில் ஏற்றப்படாமல் இயற்கை வைத்தியம் மூலம் வீட்டிலேயே சரிசெய்யவும் முடியும்.

மேகமூட்டமான சிறுநீருக்கு என்ன காரணம்?

இலேசான நீரிழப்பு காரணமாக மேகமூட்டமான சிறுநீர் உண்டாகலாம். இது மற்ற அறிகுறிகளுடன் இல்லாமல் இருந்தால் அது தானாகவே சரியாகிவிடும். சிறுநீரில் சீழ் கலந்து மேகமூட்டமாக இருக்கலாம்.

° ஈஸ்ட் வஜைனல் போன்ற பிறப்புறுப்பு தொற்றுகள்

° சிறுநீர்ப்பை தொற்று

° கோனோரியா (ஒரு வகை எஸ்டிடி)

° கிளமிடியா(ஒரு வகை எஸ்டிடி)

° சிறுநீரக கற்கள்

° சிறுநீர்க்குழாய் சுவர்களை சேதப்படுத்துவதால் உண்டாகலாம்.

° இயல்பான செயல்பாட்டை பாதிக்கும் ப்ரீக்ளாம்ப்சியா

நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற நோய்களும் சிறுநீர் மேகமூட்டத்துக்கு வழிவகுக்கும். இது அரிதான நிலை.

மேகமூட்டமான சிறுநீர் எப்படி இருக்கும்?

 அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்?
இந்த சிறுநீர் தெளிவாகவோ அல்லது வெளிப்படையானதாகவோ இல்லாமல் வெளிர் மஞ்சள் நிறத்தை கொண்டிருக்கலாம். அதில் பிசுபிசுப்பு திரவம் இருந்தால் அது மேகமுட்டமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சிறுநீர் மட்டுமே நீங்கள் அறிகுறியை கொண்டிருந்தாலும் அது சிறுநீர் பாதை தொற்றாகவும் இருக்கலாம். அதன் அறிகுறிகள்

° சிறுநீர் கழிக்க தூண்டுதல்

° சிறுநீர் கழிக்கும் போது வீக்கம்

° சிறுநீரை அடிக்கடி வெளியேற்றுவது

° சிறுநீர் இருண்டதாக இருப்பது

° சிறுநீர் இளஞ்சிவப்பு நிறம் கொண்டிருப்பது

° சிறுநீரில் இரத்தத்தின் காணக்கூடிய தடயங்களை பெறுவது

° சிறுநீர் துர்நாற்றம் வீசுவது

• இடுப்பு பகுதியில் கடுமையான வலி இருப்பது.

இந்த மேகமூட்ட சிறுநீருக்கு சரிசெய்யகூடிய வீட்டு வைத்தியங்கள் என்ன என்பதையும் பார்க்கலாம்.

நீர் :

மேகமூட்டமான சிறுநீரை குணப்படுத்த அதிகம் தண்ணீர் குடிக்கவும். சில நேரங்களில் இவை நீரிழப்பு போன்ற பாதிப்பில்லாத ஒன்றால் உண்டாகலாம். நீங்கள் சிறுநீர் பாதை தொற்று எதிர்கொண்டாலும் அறிகுறிகளையும் வலியையும் குறைக்க தண்ணீர் குடிப்பது சிறந்த இயற்கை தீர்வாக் ஐருக்கும். இது நோய்த்தொற்றை உண்டாக்கும் நுண்ணுயிரிகளுடன் இணைந்து உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. அறிகுறிகளை குறைத்து நிவாரணம் அளிக்கிறது.

பேக்கிங் சோடா :

பேக்கிங் சோடா 1 டீஸ்பூன் அளாவு எடுத்து நீரில் கலந்து நன்றாக கலந்ததும் குடிக்கவும். தினமும் ஒரு டம்ளர் இதை எடுத்துவந்தால் சில நாட்களில் சிறுநீர் இயல்பு நிலைக்கு திரும்பும்.

பேக்கிங் சோடா இயற்கையில் காரமானது. இது சிறுநீரில் உள்ள அமிலத்தன்மையை நடுநிலையாக்க உதவுகிறது. வீக்கம் மற்றும் மேகமூட்டமான சிறுநீர் போன்ற சிறுநீர்த்தொற்று அறிகுறிகளை குறைக்கிறது.

ப்ளூபெர்ரி சாறு :

சிறுநீர் தொற்று நீங்கும் வரை ப்ளூபெர்ரி சாறு குடிக்கலாம். ப்ளூபெர்ரி சாறுகளில் பல ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் கலவைகள் உள்ளன. இது சிறுநீர்த்தொற்று உண்டாக்கும் பாக்டீரியாவை தடுக்கின்றன இதை அகற்றுகின்றன. ப்ளூபெர்ரி சாறு கிடைக்கவில்லை எனில் காலை தானியத்தில் அவுரி நெல்லிகளுடன் மாற்றலாம்.

குருதி நெல்லி சாறு :

க்ரான்பெர்ரி சாறு - அரை கப்
தண்ணீர் - அரை கப்

க்ரான்பெர்ரி சாற்றை சிறிது தண்ணீரில் கரைத்து குடிக்கவும். தினமும் 1 டம்ளர் வீதம் குடித்து வந்தால் பலன் கிடைக்கும். இது சிறுநீர் மற்றும் சிறுநீர்த்தொற்றுக்கு சிறந்த இயற்கை வைத்தியம் ஆகும். ஏனெனில் இது இயற்கையான டையூரிடிக் ஆகும். இது ஈகோலியை வெளியேற்றுகிறது.

இஞ்சி :

உலர்ந்த இஞ்சி - 1 டீஸ்பூன்
தேன் - அரை டீஸ்பூன்
இஞ்சியை வெந்நீரில் சேர்த்து கொதிகவைத்து பிறகு வடிகட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும். நன்றாக கலக்க வேண்டும். இந்த சுவையான மூலிகை தேநீரை சூடாக இருக்கும் போதே பருகுங்கள். நாள் ஒன்றுக்கு இரண்டு கப் இஞ்சி டீ சாப்பிடுங்கள்.

இஞ்சி மசாலா பொருள்களில் ஒன்றாகும். நாள்பட்ட அழற்சி எதிர்ப்பு முகவராகும். இது சக்தி வாய்ந்த ஆண்டிமைக்ரோபியல் கலவைகளை கொண்டுள்ளது. இது சிறுநீர்ப்பையில் உண்டாக்கும் வீக்கத்தை குறைக்கிறது. அதே நேரம் நுண்னுயிர் எதிர்ப்பு கலவைகள் தொற்றுநோயை நீக்குகின்றன.

கொத்துமல்லி விதைகள் :

ஒன்றரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் கொத்துமல்லி விதைகள் 1 டீஸ்பூன் எடுத்து, 3 முதல் 4 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். இந்த கஷாயத்தை வடிகட்டி குடிக்கவும். தேவையெனில் தேன் சேர்த்து குடிக்கலாம்.

கொத்துமல்லி விதைகள் டையூரிடிக் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் தன்மை கொண்டவை. இது மேகமூட்டமான சிறுநீர் மற்றும் சிறுநீர்த்தொற்று அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

வைட்டமின் சி :

வைட்டமின் சி ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். இது குறிப்பிடத்தக்க ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இது சிறுநீர்பையை அமிலமாக்குகிறது. மேலும் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்க செய்கிறது. இது ஆரோக்கியமாகவும் தொற்றுநோய்களும் இல்லாமல் வைத்திருக்க உதவுகிறது.
ஆரஞ்சு, கொய்யா, அன்னாசிப்பழம், முலாம்பழம், ராஸ்பெர்ரி, தக்காளி, தர்பூசணி மற்றும் பப்பாளி போன்றவை வைட்டமின் சி நிறைந்தவை இதை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.