உமிழ்நீர்...!

உமிழ்நீர்...!
 
உணவானது வயிற்றில் முழுவதும் செரிக்கப்பட வேண்டும். 
செரிமானத்தின் பாதிவேலை வாயிலேயே நடந்துவிடுகிறது.

வயிற்றிலுள்ள செரிமானத்தின் அமைப்பு வாயில் அரைத்துச் செல்லப்ப்படும் உணவினையே செரிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.

ஆகவே உண்போர், உட்கொள்ளும் உணவினை வயிற்றுக்குள் செல்லுமுன், அது வாயிலேயே நன்றாய் அரைத்து குழைவாக மாற்றி பின்பு வயிற்றினுள் இறங்குமாறு செய்தல் அவசியம்.
 
நன்றாய் அரைத்து குழைத்து இறங்குவதற்கு ஏற்பதான் வாயினுள் பற்களும், உமிழ்நீரும் இயற்கையால் வழங்கப்பட்டுள்ளதை மனிதர்களாகிய நாம் அறிய வேண்டும்..
 
"நொறுங்கத் தின்றால் நூறு வயது"
 
என்ற உயிர்மொழி
 நாம் முன்னோர்களின் வழிகாட்டுதல்.

சிலர் இதை தவறாக பொருள் கொள்ளக்கூடும்.

இதன் உண்மை என்னவெனில், வாயிலே உணவை நொறுங்க (குழைவாக்கி) வைத்து பாதி வேலையை வாயிலேயே முடித்து இரைப்பைக்கு அனுப்ப வேண்டும்.

அதுவே நன்றாக செரிமானம் ஆகும். அவ்வாறுதான் இயற்கை அமைந்துள்ளது. இயற்கையோடு ஒத்துழைத்து வாழ்ந்தால், உண்டால் நூறு வயது வாழ முடியும். 

கோழி விழுங்குவது போல் எந்த உணவை உண்டாலும் வயிறு செரிமானத்திற்கு கடினப்படும்.
 மேலும் ஆயுளும் குறையும். 
நோயில்லாமலும், நூறு வயது வாழும் எண்ணம் உடையவர்கள் நொறுங்க உண்டால் வாழலாம்.
 
பற்கள் உணவினை பிளந்து, பொடியாக்குவதகாகவே உள்ளன. உமிழ்நீர் உணவினை குழைவாக்குவதோடு அதன் கண் உள்ள காடிநீர், உணவில் உள்ள பசைமாவுப் பொருட்களை சர்க்கரையாக்கி சூட்டினை ஏற்ப்படுத்தி வயிற்றினுள் செரிக்க எதுவாக தயாராக்கப்படுகிறது.

இதுபோன்ற பலத்தன்மைகள் உமிழ்நீரில் உள்ளது. எந்த உணவுப்பொருட்கள் என்றாலும் உமிழ்நீரில் நன்றாக கலந்து அரைத்து வயிற்றினுள் சென்றால் நல்ல செரிமானம் ஆகும்.
உடல் ஆரோக்கியமாகும்.
 
வயிற்றுப்புண், வயிற்றுவலி, செரியாமை மலச்சிக்கல் 

இவற்றிலிருந்து நலம்பெற  உணவினை வாயில் உமிழ்நீருடன் சேர்ந்து அரைக்க நலம் ஏற்படுகிறது

எந்த உணவுப் பதார்த்தங்களையும் நன்றாக ரசித்து, சுவைத்து, அரைத்து உண்ணுதல் நலம் பயக்கும். 

அளவு மிஞ்சினால் 
அமிர்தமும் நஞ்சு...!

ஆரோக்கிய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி 
ஆரோக்கியமான பாரதத்தை
 உருவாக்குவோம்.....!