இரத்தத்தை சுத்தப்படுத்த, விருத்தியாக்க எளிய வழிகள்..!!

இரத்தத்தை சுத்தப்படுத்த, விருத்தியாக்க எளிய வழிகள்..!!

நமது உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகக்கவும் வைத்துக்கொள்வதை பற்றி பார்க்கலாம்.

இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் வரும். உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம்.

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம்  விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொ‌‌ண்டது. இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரண தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம்.

சமைக்கப்படாத பூண்டு இரத்தத்தை சுத்தம் செய்ய மிகவும் ஏற்ற ஒன்றாகும். இதில் சல்பர் உள்ளதால் இது இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும் பூண்டு மிகச்சிறந்த ஆண்டி மைக்ரோபையல் தன்மை கொண்டதாகவும் உள்ளது. இது இரத்தத்தை தூய்மைப்படுத்த உதவுகிறது. மேலும் இரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கு பாக்டீரியா, வைரஸ்கள் போன்றவற்றையும் அழிக்கிறது.

பசுமையான காய்கறிகளை விட மிகச்சிறந்த ஒரு உணவு கண்டிப்பாக இருக்க முடியாது. இந்த பச்சை காய்கறிகள் உங்களது இரத்தத்தை சுத்தம் செய்யும் ஒரு முக்கிய பொருளாக உள்ளது. ப்ரோகோலி, முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் உங்களது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. மேலும் இவை கேன்சர், கார்டிவாஸ்குலர் நோய் மற்றும் சர்க்கரை நோயில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள உதவுகின்றன.

தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும். நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.

மஞ்சளின் மகிமைகளை பற்றி அறியாதவர்களே கிடையாது என்று கூறலாம். மஞ்சளில் அதிகளவு நச்சுக்களை போக்கும் தன்மை உள்ளது. மஞ்சளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்களது இரத்தம் சுத்தமாக இருக்கும். இதில் உள்ள குர்குமின் ஒரு ஆண்டி ஆக்ஸிடண்டாக உள்ளது இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் வந்தாலும் இரத்தக் கொதிப்பு, இரத்தக்கட்டு குணமாகும். விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள  கிருமிகள் அழிந்துபோகும்.