மருத்துவ பயன்களை அள்ளித்தரும் சுரைக்காய் !!

மருத்துவ பயன்களை அள்ளித்தரும் சுரைக்காய் !!

பல்வேறு மருத்துவ பயன்களையும் உடலுக்கு ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும் தரும் சுரைக்காயின் பயன்களை பற்றி பார்ப்போம்.

வைட்டமின் பி சி சத்து மிகுந்து காணப்படும் இக்காய் சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிப்பது மட்டுமன்றி பற்களில் ஏற்படும் ஸ்கர்வி போன்ற
நோய்களை குணமாக்கும் மருத்துவ ஆற்றல் கொண்டது.

இரும்பு சத்தை அளித்து எலும்புகளை
வலுவூட்டுகிறது. நீர் சத்தை அதிகரித்து உடலில் சீரான ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு நீர் சத்தையும் தாய்மார்களின் தாய்ப்பால் குடுக்கும் சக்தியையும் அளிக்கிறது.

சருமப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கை கால்களில் எரிச்சல் உள்ள இடங்களில் சுரைக்காயின் சதை பகுதியை வைத்து கட்டினால் எரிச்சல் குறையும்.

நீரழிவு நோய் உள்ளவர்கள் சுரைக்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இக்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற வியர்வை சிறுநீர் மூலம் வெளியாகிறது.

மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தத்தை சமநிலையில் வைக்க முடியும். பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை குணமாகும் ஆற்றல் கொண்டது.

சுரைக்காயின் சதை பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துவதால் சிறுநீரக கோளாறுகல் சரியாகும். துளசி இலை மற்றும் புதினா இலையை நன்கு அரைத்து சுரைக்காய் சாற்றுடன் சேர்த்து அருந்தி வருவதன் மூலம் உடல் பருமனை
தடுக்கலாம்.

தயிருடன் சுரைக்காயை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் வயிற்றில் நடக்கும் செரிமானம் சீராக நடக்கிறது.