நுரையீரல் பலம் பெற, களைப்பின்றி உழைக்க, நோயின்றி வாழ

நுரையீரல் பலம் பெற, களைப்பின்றி உழைக்க, நோயின்றி வாழ

ஒரு கைப்பிடி விழுதி இலையைப் பறித்து வாயிலிட்டு மென்று இதில் பாதியளவை விழுங்கி விட்டு  மீதமுள்ள பாதியளவு விழுதி இலையின் விழுதை வாயின் தாடைப் பகுதியான கடை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு சிறிது தூரம் ஓடி பாருங்கள்

  எப்போது ஓடினாலும் ஏற்படும் களைப்பும் இளைப்பும் இப்பொழுது நமது உடலில் ஏற்படாது இது உறுதி

  ஆச்சரியமாக இருக்கலாம்,  ஆனால் இதுதான் உண்மை

  இதற்குக் காரணம் யாதெனில்

  விழுதி இலை உடலில் சேரும் போது உடனடியாக நுரையீரல் அளவுக்கு அதிகமான பலத்தைப் பெற்று விடுகின்றது. அவ்வளவு அதிசய ஆற்றல் விழுதி எனும் இந்த மூலிகைக்கு உண்டு

  அதாவது

வரையறுத்துச் சொல்ல முடியாத அளவிற்கு ஒரு அதீத வலிமையை நமது நுரையீரலுக்கு விழுதி இலையின் மூலம் கிடைத்து விடுகின்றது

இதனால்தான் வேகமாக நடந்தாலே ஏற்படும் மேல் மூச்சு கீழ் மூச்சாக ஓடும் நமது சுவாசம் வேகமாக ஓடினாலும் வழக்கமாக நடக்கின்ற சீரான சுவாசமாகவே  நடைபெறுகின்றது

  இந்த மாற்றத்தை ஒரே நாளில் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியாது இதை உணர்ந்து கொள்வதற்கு ஒருவார காலம் தேவைப்படும்
 

ஒரு சோதனை பயிற்சி முறை


இன்று விழுதி இலையை உண்ணாமல் ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஓடிப் பாருங்கள்.

அடுத்த நாள்
 
விழுதி இலையை மென்று விழுங்கி விட்டு அதே தூரத்தை ஓடிப் பாருங்கள் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உண்மையில் உணரலாம்

முதல் நாள் ஓடுகின்ற பொழுது அதிகமான களைப்பு ஏற்படும் அடுத்த நாள் ஓடுகின்ற போது அந்த களைப்பின் அளவு குறைந்துவிடும்

விழுதி இலையை மென்று விழுங்கி விட்டு ஓடுகின்ற பொழுது இரண்டொரு நாட்களில் பெரிதான வித்தியாசம் தெரியாவிட்டாலும் 

    ஒரு வார காலத்தின் முடிவில், ஓடினால் ஏற்படும் பெருமூச்சும் உடல் களைப்பும் முழுமையாக நீங்கிவிடும் இந்த வித்தியாசத்தை நாம் அனைவராலும்  அறிந்து கொள்ள முடியும்

ஆக 

தினமும் இந்த வைத்திய முறையை கடைபிடித்து வந்தால் நுரையீரல் பலம் பெறுகின்றது  ஓடினால் செலவாகும் பிராணசக்தி உடனே உடலில் சேகரிக்கப்படுகிறது அதனால்தான் ஓடினாலும் உடலில் களைப்பு ஏற்படுவதில்லை.

  எனவே இன்றைய காலகட்டத்திற்கு பிராண சக்தியைப் பெறுவதற்காக இதைவிட பெரியதொரு எளிதான வைத்திய முறை இனி தேடினாலும் கிடைக்காது பயன்படுத்துங்கள் பயன் பெறுங்கள்.
 

விழுதி இலையின் பக்க விளைவுகள்


விழுதி இலையை தினந்தோறும் உண்டு வந்தால் நுரையீரல் பலம் பெறுவதோடு மட்டுமல்லாமல் வாத பித்த சிலேத்தும் எனும் முக்குணங்களின் மாறுபாடுகள் சமநிலைப் படுத்தப்பட்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகி உடலில் தோன்றும் நோய்கள் அனைத்தும் விலகி விடுமளவிற்கு இந்த விழுதி இலை உதவுகின்றது 

விழுதி இலையை உண்டு வந்தால்,உடல் பலவீனம் நீங்கும்.தேவையற்ற கொழுப்புகள் குறையும் உடல் இறுகி நரம்பு மண்டலம் பலம் பெறும் 

உடலின் வெப்பம் தணியும், உடலின் களைப்பு நீங்கும் 

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை வெட்டை கர்ப்பப்பை கோளாறுகள் போன்ற நோய்கள் அனைத்தும் நீங்கும்.
 

விழுதி சூரணம் தயாரிப்பு முறை


பச்சையாக விழுதி இலை கிடைக்காவிட்டால்

  நூறு கிராம் விழுதி இலை பொடியுடன் இருபது கிராம் சீரக பொடியும் பத்து கிராம் மிளகு பொடியும்  ஐந்து கிராம் மஞ்சள் பொடியும் கலந்து இதை தினந்தோறும் காலை மாலை இருவேளையும்  வெந்நீருடன் கலந்து ஒரு மண்டல காலம் பருகி வர நுரையீரலுக்கு நிரந்தரமாக பலமுண்டாகும். மேலும் இதன் மூலம் மேலே சொன்ன அனைத்து பயன்களும் நமது உடலுக்கு கிடைக்கும்

   குறிப்பாக சுவாச சம்பந்தமான ஆஸ்துமா, மூக்கடைப்பு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குதல் போன்ற நோய்கள் அனைத்தும் விழுதி இலையை உண்டு வந்தால்  விலகி ஓடிவிடும்
 

களைப்பில்லாமல் உழைக்க

நுரையீரலுக்கு பலம் தருவதோடு மட்டுமில்லாமல், சோர்வில்லாமல் உழைக்கும் அளவிற்கு உடலுக்கு அளவுக்கதிகமான சக்தியையும் கொடுக்கிறது. இதன் மூலம் நாள் முழுவதும் சோர்வில்லாமல், உற்சாகமாக உழைக்க முடியும்.

 

ஓட்டப்பந்தய வீரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு

அனைத்து விளையாட்டுகளிலும் ஓட்டமும், Stamina-வும் முக்கியமானதாகும். இதற்காகவே தற்போதுள்ள வீரர்கள் ஸ்டிராய்டுகள் போன்ற பக்க விளைவுகள் தரும் மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் ஸ்டிராய்டுகள் எடுத்துக் கொள்ளும் போது போதை போன்ற தற்காலிக பயன் மட்டுமே கிடைக்கிறது. மேலும் இதன் மூலம் வரும் பக்க விளைவுகளும் அதிகம். 

விழுதி இலையை சூரணமாக தினசரி எடுத்து வரும் போது சராசரி மனித ஆற்றல் கிட்டத்தட்ட 20-30% இயற்கையாக அதிகரிக்கிறது. 

உதாரணத்திற்கு உங்களால் 100 மீட்டர்களை 15 செகண்டில் ஓட முடியும் என்றால்  விழுதி இலையை தினமும் எடுத்து வந்தால் 2-3 செகண்டுகள் வரை குறைக்க முடியும்.

உங்களால் 100 கிலோ தூக்க முடியும் என்றால் விழுதி இலையை தினமும் எடுத்து வரும்போது 20-30 கிலோ வரை கூடுதலாக தூக்க முடியும்.

இந்த முடிவுகளுக்காக நீங்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க தேவையில்லை, ஒரு வாரமே போதுமானது. 


முறைப்படி தயாரித்து சூரணம் செய்யப்பட்ட விழுதி இலையை பெற

 

K7 Herbo Care, 

13/A, New Mahalipatti Road,

Madurai-625001, 

Tamilnadu, India.

Whatsapp & Call 1: +91-9025047147.

Whatsapp & Call 2: +91-9629457147. 

 
விழுதி


விழுதி

விழுதி