தொண்டையில் ஏற்படும் சதைவளர்ச்சி குணமாக ஒரு எளிய மருத்துவம்.:

தொண்டையில் ஏற்படும் சதைவளர்ச்சி குணமாக ஒரு எளிய மருத்துவம்.:

தேவையான பொருட்கள்.:
நல்ல எண்ணெய் - 100 மி.லி,
வில்வ இலை - 20 கிராம்,
துளசி இலை - 20 கிராம்.

செய்முறை.:
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக் கொள்ளவும்.

பிறகு வில்வ இலை மற்றும் துளசி இலை ஆகிய இரண்டையும் சிறிதளவு தண்ணீர் விட்டு தனித்தனியே அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த இலைகளை பிழிந்து அதன் சாற்றை மற்றும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி நல்ல எண்ணெய் எடுத்துக் கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.

மேலும் இந்த எண்ணெய் உடன் அரைத்த சாற்றை சேர்த்துக் கொண்டு 15 நிமிடம் கொதிக்க விடவும்.

பிறகு இதனை குளிர ஆற வைத்து வடிகட்டி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக் கொள்ளவும்.

நோயுள்ளவர்கள் நாளொன்றுக்கு ஒரு தேக்கரண்டி அளவு இந்த தைலத்தை எடுத்து தொண்டையில் படும்படி செய்து 5 நிமிடம் கழித்து தைலத்தை வெளியேற்ற வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் செய்து வர தொண்டையில்  ஏற்பட்ட  சதைவளர்ச்சி படிப்படியாக குணமாகும்.