பசலைக்கீரை

இதில் பெரும் அளவில் வைட்டமின் சத்துக்கள் உள்ளன, சுண்ணாம்புச்சத்து உள்ளது, இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் சிவப்புச்சத்து ஹீமோகுளோபின் உள்ளது. புரதங்களைப் பலப்படுத்தும் அமிலங்கள் உள்ளன.
அது நம்மைப் பேணிப் பாதுகாக்கும் உணவு.
அதில் காரசத்துள்ள தாதுப் பொருள்கள் ஏராளமாக உள்ளன.
ஆதலால் அது தொற்று நோய்க்கு எதிரான தடுப்புச் சக்தியை மிகவும் ஆற்றலுடன் பேணுகின்றது.

பசலைக்கீரையை உட்கொண்டால் எரிச்சலூட்டும் ஒரு வகை நச்சு அமிலச்சத்து மிகமிகச் சிறிய அளவில் உண்டு.
தண்ணீரில் கரையக்கூடிய ஒரு வகைப் புரதச்சத்தும் இதில் மிகமிகச்சிறிய அளவில் உண்டு. ஆனால் வைட்டமின் சத்துக்கள் "A" "B" "C"ஆகியவையும், பொட்டாசிய உப்பின் காரச்சத்தும் ஏராளமாக உள்ளன.
வைட்டமின் "A" பார்வைக் கோளாரைக் குணப்படுத்தும், இரத்த விருத்தி உண்டாக்கும்.
இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் சேர்கின்றது.
சோடியம், போலாசின், கால்சியம் உள்ளன ஆனால் கொழுப்பு சத்துக்கிடையாது.
பசலைக்கீரை மிகவும் சுலபமாக செரிமானம் ஆகின்றது, குளிர்ச்சி தருகின்றது, ஊட்டச்சத்து உள்ளது.
எரிச்சலைத் தணிக்கிறது, மிக உயர்ந்த உணவாக உள்ளது.
பித்தம், நீர்தாரை, வெட்ட நோய்கள் குணமாகின்றன. தோல்நோய்கள், மேகம், சீதபேதி குறைகின்றது.
இதன் இலைச் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க நீர்கோவை குணமாகும்.

இந்தக் கீரை சாப்பிடும் போது தாது கெட்டி படும்.
மூளைக்கு சக்தியைக் கொடுக்கும். 
இதை சிறிதளவு தண்ணீரில் சமைக்க வேண்டும்.
சமைத்த பின் தண்ணீரை வெளியில் கொட்டிவிடக் கூடாது ஏனெனில் அதில் மிகுந்த ஊட்டச்சத்துப் பொருள்கள் உள்ளன.
மிளகு, பூண்டு, தக்காளி சேர்த்து ரசம் வைக்கலாம்.
பசலைக்கீரையின் இளம், மென்மையான முளைகளைச் சமைக்காத பச்சடிகளில் பயன்படுத்தலாம்.
இவற்றைப் பச்சடிக் கீரையின் கொழுந்துகளுடன் செர்த்துக் கொள்ளலாம்.
இது நல்ல பசியைத் தூண்டிவிடுகின்றது. பருப்புகளுடன் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளும் கீரை வகைகள் மிகவும் நன்மை தருகின்றன.
பசலைக்கீரை மலத்தை நன்றாக இளகச் செய்கின்றது.

பசலையின் சாற்றைப் மேல்பூச்சாக பூசுகிற போது உடல் அரிப்பு தீப்புண்கள், தழும்புகள், பருக்கள், மருக்கள் ஆகியவற்றுக்கும் பயன் தருகின்றன. குழந்தைகளின் சத்துக் குறைபாட்டை தடுக்கக் கூடியதாகவும் கொடிப்பசலைக் கீரை விளங்குகிறது.

எரிச்சலைத் தணிக்கின்றது. திசுக்களின் அழிவை இது குறைக்கின்றது. இதில் உடல் வறட்சிக்கு எதிரான பெரிபெரி என்னும் வீக்க நோயிக்கு எதிரான, கரப்பான் வியாதிக்கு எதிரான சத்துக்கள் கணிசமான அளவில் உள்ளன.
கொழுந்தாக உள்ள கொடிச்சுருளைப் பச்சையாகவே உண்பது மிகுந்த நன்மையைத் தருகின்றது.
நீரிழிவு, இரத்தக் குறைவு, கால் விரல்களில் உள்ள வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பசலைக்கீரை மிகவும் உதவுகின்றது. இதன் சாறு, சிறுநீரில் கற்கள் இருந்தால் அவற்றைக் கரைக்க உதவுகின்றது. கற்களைக் கரைத்து வெளியேற்றும் சக்தி அதற்கு உள்ளது.

சிறுநீரகக் கோளாறுகளையும் இது அகற்றுகின்றது.
இதன் சாற்றைக் கொப்பளித்தால் தொண்டைப்புண் குணமாகின்றது.
இலைகளை 1 லிருந்து 10 வரைக் கக்ஷாயம் வைத்து அருந்தினால் காய்ச்சல்கள், கல்லடைப்பு, சுவாசப்பைகளிலும் குடல்களிலும் ஏற்பட்டுள்ள வீக்கங்கள், சுவாசிப்பதில் சிரமம், வேகமாக இயங்கும் சுவாசம் ஆகியவை குணமாகின்றன.
இத்தகைய நோய்களின் போது இது எரிச்சலைத் தணிக்கின்றது.
துவர்ப்பு மருந்தாக உதவுகின்றது, சிறுநீரைப் பெருக்குகின்றது.
உட்கொள்ளும் அளவு 1 அல்லது 2 அவுன்சு.
வளரும் இளம்பெண்கள் பசலைக் கீரையை ஏராளமாக உண்ணவேண்டும், அதில் இரும்புச் சத்து ஏராளமாக உள்ளது, சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது.

பசலைக் கீரையால் சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சலுடன் வெளியாதல், வெள்ளை ஒழுக்கு அகியவை நீங்கும்.
 
பசலை ரத்தத்தை சுத்தப்படுத்தி உடலின் வெப்பத்தைக் குறைக்கக் கூடியது. இக்கீரையை வீக்கம், கட்டிகளுக்கு மேல் விளக்கெண்ணெய் விட்டு  வதக்கிக் கட்ட வீக்கம் வற்றிவிடும்.
 
கொடிப்ப பசலை ஒரு மேற்பூச்சு மருந்தாகி உள்ளுறுப்புகளின் அழற்சியைப் போக்குகிறது.
சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றுகிறது.
 
வயிற்றுக் கோளாறுகளுக்கு மருந்தாவதோடு வயிற்றுப் பகுதிக்கு குளிர்ச்சி தருவதாகவும் உள்ளது.
இலைச் சாற்றைக் குடிப்பதாலும் 10 முதல் 20 மி.லி. வரை மேலே பூசுவதாலும் ஆணுறுப்பில் ஏற்படும் புண்கள் விரைவில் ஆறும்.