சுட சுட வெந்நீர் குடித்தால் இத்தனை பாதிப்புக்களை ஏற்படுத்துமா?

சுட சுட வெந்நீர் குடித்தால் இத்தனை பாதிப்புக்களை ஏற்படுத்துமா? 

பொதுவாக ஒவ்வொரு மனிதனும் எந்தளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கிறாரோ அந்தளவுக்கு உடம்புக்கு நல்லது. எளிதாகக் கிடைக்கும் விஷயங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. அதிலும் வெந்நீர் குடிப்பது இன்னும் பல நன்மைகளை தருகின்றது.

குறிப்பாக கெட்ட கொழுப்பு, உடல் எடை, சளி, காய்ச்சல், இருமல் போன்ற பல நோய்களை தீர்க்க பெரிதும் உதவுகின்றது.

இருப்பினும் வெந்நீரை சுட சுட குடிப்பதனால் ஒரு சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவதாக கூறப்படுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.  

அந்த வகையில் தற்போது அதிகம் வெந்நீர் குடிப்பதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

சூடான நீரின் அதிகப்படியான நுகர்வு மொத்த இரத்த அளவை அதிகரிக்கிறது. மேலும் இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற இருதய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.  

அதிக சூட்டுடன் நீரைக் குடிப்பதால் வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் உள்ள மெல்லிய நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.மேலும், சூடான நீரை குடிப்பதால் உடலின் உள்ளே இருக்கும் மென்மையான உறுப்புகள் பாதிக்கப்படும்.

அதிக அளவில் சுடுதண்ணீர் குடித்தால், அதுவும் குறிப்பாக இரவில் குடித்தால் சரியாக தூக்கம் வராது.

அதிக அளவில் வெந்நீர் குடித்தாலும், அளவுக்கு மீறிய சூடோடு அடிக்கடி குடித்து வந்தாலும் சிறுநீரகக் கோளாறு உண்டாகும்.மேலும் இரத்தத்தின் கன அளவு குறையும் வாய்ப்பு உண்டாகும்.

எப்போதும் வெந்நீர் குடித்து வருவதால் அது, உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளை அதிக அளவு நீர்மப்படுத்திவிடும்.

சூடான நீரை மீண்டும் மீண்டும் குடிப்பதால் உடலின் உள் உறுப்புகள் எரியும் அபாயத்தை உருவாக்க முடியும். உட்புற உடல் உறுப்புகளின் திசுக்கள் மிகவும் உணர்திறன் கொண்டவையாகும். மேலும் அதிக வெப்பநிலை அவற்றை பாதிக்கும் மற்றும் கொப்புளங்களை ஏற்படுத்தும்.