காச நோயை எளிதில் விரட்ட இதோ எளிய மருத்துவம்!

 காச நோயை எளிதில் விரட்ட இதோ எளிய மருத்துவம்!

 

என்புருக்கி நோய் அல்லது காச நோய் (Tuberculosis, டியூபர்க்குலோசிஸ்) என்பது மைக்கோபாக்டீரியா (mycobacteria) என்னும் நுண் கோலுயிரியின் தாக்குதலால் ஏற்படும் கடும் தொற்றுநோய்.

 

காச நோயானது பொதுவாக மூச்சுத்தொகுதியில் நுரையீரலைத் தாக்கி நோயுண்டாக்கினாலும், இவை நரம்புத் தொகுதி, நிணநீர்த் தொகுதி (Lymphatic system), இரைப்பை குடல் தொகுதி, எலும்புகள் மூட்டுகள், குருதிச் சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பற்பல பகுதிகளிலும் நோய் உண்டாக்க வல்லவை. 

 

அந்தவகையில் இதிலிருந்து விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எளிய மருத்துவங்கள் சிலவற்றை பார்ப்போம். 

 

* காசநோயின் ஆரம்ப காலத்தில் குங்கிலியம், பெருங்காயம், இஞ்சி, சர்க்கரை, நான்கையும் விழுதாக அரைத்து வெயிலில் காயவைத்து சிறு வில்லைகளாகத் தயார் செய்து தினமும் இருவேளை குணமாகும் வரை சாப்பிட்டு வர வேண்டும்.

 

* ஆடாதோடைப் பூக்களோடு தேன்கலந்து குல்கந்து தயாரித்து உணவுக்கு முன் சாப்பிட்டுவர வேண்டும். 

 

* தூதுவளையை உணவிலோ அல்லது துவையலாகவோ செய்து சாப்பிட்டுவர நல்ல பயனளிக்கும். 

 

* தினமும் 2 வேளை ஈஸ்வரமுள்ளிச்சாறு பருகிவர காசநோய் குணமாகிவிடும். 

 

* காட்டுக்கள்ளிச் செடியின் அனைத்து பாகங்களையும் சேர்த்து இடித்து கஷாயம் செய்து தினமும் 2 வேளை பருகிவர குணமாகும். 

 

* காட்டு எள் கஷாயத்துடன் பன்னீர் கலந்தும் சாப்பிட்டு வரலாம். 

 

* காசநோயால் ஏற்படும் வாந்தி பேதி குணமாக கொய்ய இலைக் கஷாயம் பருகிவர வேண்டும். 

 

* சாலாமிசிரி கஷாயம் ஒரு தேக்கரண்டி அளவு தினமும் 2 வேளை பருகிவர வேண்டும். 

 

* காசநோய்க்கு உலர்ந்த திராட்சை சிறந்த உணவாகும். இரத்த ஓட்டத்தை சீராக்கி சுவாக சுகமளிக்கும். 

 

*  துவரைக் கல்பம் தினமும் சாப்பிட்டு வர காசநோய் குணமாகும். 

 

* பலாப்பூக்களை நீர் கலந்து கசக்கி சாறெடுத்து அருந்திவர குணமாகும். 

 

* பூனைக்காலிச் கொடியின் வேர்களை துண்டுகளாக வெட்டி பொடித்து தேன்கலந்து சாப்பிட்டுவர விரைவில் காசநோய் குணமாகும். 

 

* ஊமத்தை விதைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய் 2-3 சொட்டுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர காசநோய் குணமாகும்.