குடல் எரிச்சல் எளிய முறையில் குணமாக
குடல் எரிச்சல் எளிய முறையில் குணமாக:
1) கடுக்காயுடன், சிறிது மஞ்சள் சேர்த்து தூள் செய்து தினமும் மூன்று வேளையும் உணவுக்குப் பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வர குடல் எரிச்சல் குணமாகும்.
2) நெல்லிக்கனி – 50 கிராம்
மஞ்சள் – 50 கிராம்
படிகாரபற்பம் – 10 கிராம்
மூன்றையும் கலந்து வைத்துக்கொண்டு மூன்று வேளை உணவுக்குப் பின் அரை ஸ்பூன் (2 கிராம்) வீதம் சாப்பிட்டு வர குடல் எரிச்சல் குணமாகும்.
3) மணத்தக்காளிக்காய் – 50 கிராம்
சுண்டைக்காய் – 25 கிராம்
மஞ்சள் – 10 கிராம்
மூன்றையும் கலந்து காயவைத்து தூள்செய்து வைத்துக்கொண்டு அரை ஸ்பூன் (2 கிராம்) வீதம் காலை உணவுக்குப்பின்னும் மாலையும் இருவேளை சாப்பிட குடல் எரிச்சல் குணமாகும்.
4) அம்மான் பச்சரிசி இலையை சிறிது மஞ்சள் சேர்த்து, உப்புப் போடாமால் கடைந்து சாப்பிட குடல் எரிச்சல் தீரும்.
5) வெண்டைக்காயுடன் சிறிது மஞ்சள்
சேர்த்து, உப்புப்போடாமால் வதக்கி சாப்பிட குடல் எரிச்சல் தீரும்.