மூட்டு வலியை குணப்படுத்த கூடிய மருத்துவகுணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சள் !!

 மூட்டு வலியை குணப்படுத்த கூடிய மருத்துவகுணம் 

நிறைந்த கஸ்தூரி மஞ்சள் !!

 

மூட்டு வலியை குணப்படுத்தக் கூடியதும், வயிற்று புண்களை ஆற்றவல்லதும், தலைபாரத்தை சரி செய்யும் தன்மை உடையதுமான கஸ்தூரி மஞ்சளின் நன்மைகள்  குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். கஸ்தூரி மஞ்சள் நுண்கிருமிகளை அழிக்க கூடியது.

 

கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி குடல் புண்களை ஆற்றக்கூடிய, வயிற்றுப்போக்கை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். 

 

தேவையான பொருட்கள்: கஸ்தூரி மஞ்சள், தயிர். 

 

செய்முறை: 

2 ஸ்பூன் தயிர் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து கலந்து காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர அல்சர்  குணமாகும்.

 

மணம் தரவல்லது. உள் உறுப்புகளை தூண்டும். உடலுக்கு பலம் தரும். தோல்நோய்களை போக்கும். உடலில் தேவையற்ற முடிவளர்வதை தடுக்கிறது. நுரையீரல் நோய்களை குணப்படுத்துகிறது.

 

அமிலத் தன்மையினால் குடலில் ஏற்படும் அரிப்புகளை சரிசெய்யும். இரத்தத்தை சுத்தப்படுத்தி குடலில் சேர்ந்த கிருமிகளை வெளித்தள்ளும். வெள்ளைபோக்குக்கு  மருந்தாகிறது. இரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. நச்சுக்கள் உடலில் சேராத வண்ணம் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்ககூடியது. 

 

கஸ்தூரி மஞ்சளை கொண்டு நீர்க்கோவை, தலைபாரத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். 

 

தேவையான பொருட்கள்: 

கஸ்தூரி மஞ்சள், சுண்ணாம்பு. 

 

செய்முறை:  

சிறிது கஸ்தூரி மஞ்சள் பொடியுடன் நீர்விட்டு, சிறிது சுண்ணாம்பு சேர்க்கவும்.இந்த கலவையை நெற்றி மற்றும் மூக்கின் மேல் பற்று போட்டு வந்தால் குணமாகும். 

 

கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி தசைவலி, மூட்டுவலிக்கான மேல்பற்று மருந்து தயாரிக்கலாம். 

 

தேவையான பொருட்கள்: 

விளக்கெண்ணெய், கஸ்தூரி மஞ்சள்.  

 

செய்முறை: 

ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் விட்டு சூடு செய்யவும். இதில், கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து கலக்கவும். இதை மேல்பற்றாக பூசிவர தசை  வலி, மூட்டுவலி, வீக்கம் சரியாகும்.