சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து, நீரிழிவு நோய்க்கு நாட்டு மருந்து, டயாபடீஸ் வீட்டு மருத்துவம், சர்க்கரை நோய் பாட்டி வைத்தியம், சர்க்கரை நோய் குறைய பாட்டி வைத்தியம், சர்க்கரை நோய்க்கு இயற்கை மருத்துவம், சர்க்கரை நோய் சித்த மருத்துவம், சர்க்கரை நோய் சித்த வைத்தியம், சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவம், சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து, சர்க்கரை நோய்க்கு சித்த வைத்தியம், சர்க்கரை நோய் குணமாக சித்த மருத்துவம், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சித்த வைத்தியம்
சர்க்கரை நோயை குணப்படுத்துவது எப்படி?
30 வயதுக்கு
மேல் ஆகி விட்டாலே இன்று சர்க்கரை நோயும், இரத்த அழுத்தமும் சர்வ சாதாரணமாகி
விட்டது. இன்சுலின் மாத்திரைகளும், BP மாத்திரைகளும் அன்றாட உணவின் ஒரு பகுதியாகி
விட்டன. நான் சர்க்கரை நோயாளி (Sugar Patient) என்று சொல்லிக் கொள்வதில் இன்று
நிறையப் பேர் பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள். சர்க்கரை நோயிலிருந்து எப்படி குணமாகி
வெளியே வருவது எப்படி என்பதை பார்ப்போம்.
சர்க்கரை நோய் பெயரில் மட்டும்தான்
இனிப்புள்ள ஒரு நோய், ஆனால் சர்க்கரை நோய் வந்து விட்டால் வாழ்க்கையே கசந்து
விடும் அளவிற்கு உடலுக்கு அனைத்து பிரச்சினைகளையும் கொண்டு வந்து சேர்த்து விடும்.
எனவே சர்க்கரை நோயை வராமல்
தற்காத்துக் கொள்வது மட்டுமே உங்களை எதிர்கால பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றும்…
சர்க்கரை நோய் வந்த பிறகு நமது அன்றாட
பழக்க வழக்கங்களை சர்க்கரை நோய்க்கு ஏற்ப மாற்றிக் கொள்ள தயாராக இருக்கும் நாம்,
நோய் வருவதற்கு முன்பே மாற்றிக் கொள்ள யோசிப்பதில்லை…
இன்றைக்கு உள்ள மருத்துவம் தொடர்பான
ஊடகங்களும் அது தொடர்பான செய்திகளும் கிட்டதட்ட நம்மை மூளைச்சலவை செய்து அவர்கள்
சொல்ல நினைக்கின்ற செய்தியை நம் மனதில் பதிக்கிறார்கள். அது என்னவென்றால் சர்க்கரை
நோயை குணப்படுத்தவே முடியாது. கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்திருக்க முடியும்
என்பதே அந்த செய்தி. ஒரு குதிரையை கூடாமல், குறையாமல் ஒரே வேகத்தில் செலுத்த
முடியும், ஆனால் நிறுத்தவே முடியாது. என்ன ஒரு Logic. இதை நாமும் உண்மை என்று
நம்பி கடைசிவரை அந்த நோயுடனேயே வாழ மனதளவில் பழக்கப் படுத்தப்படுகிறோம்.
35,40 வயதிற்கு மேல் ஆகி விட்டாலே நாம் எந்த ஒரு
காரணத்திற்காகவும் மருத்துவமனைக்கு சென்றாலும் நம்மை சர்க்கரை, இரத்த பரிசோதனைகள்
செய்ய வைத்து உங்களுக்கு சர்க்கரையும், இரத்த அழுத்தமும் சற்றே கூடுதலாக உள்ளன,
அதற்கு இந்த இரண்டு மாத்திரைகளை மட்டும் போட்டுக் கொள்ளுங்கள் என்று
ஆரம்பிக்கிறார்கள். இதுவே பிள்ளையார் சுழி.
இது ஒரு வகை என்றால் மற்றொரு வகை
தானாக சென்று வலையில் விழுவது. (இவர்கள் அனைவரும் மெத்தப் படித்தவர்கள் என்பதுதான்
முக்கியமான தகவல்) அதுதான் முழு உடல் பரிசோதனை. நம் உடல் ஒன்றும் மெஷின் அல்ல,
எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரி இயங்கிக் கொண்டிருப்பதற்கு. நம் ஒவ்வொருவரின்
உடலையும் 365 நாட்களும் சோதனை செய்தாலும், ஒவ்வொரு நாளின் முடிவுகளும் கண்டிப்பாக
வெவ்வேறாகவே இருக்கும்.
நீங்கள் முழு உடல் பரிசோதனைக்கு
செல்லும் ஒரு குறிப்பிட்ட ஒரு நாளன்று உங்கள் அலுவலகத்திலோ அல்லது உங்கள் வீட்டிலோ
ஏதாவது பிரச்சினை என்றால் கண்டிப்பாக உங்கள் இதய துடிப்பு கூடத்தான் இருக்கும்,
இரத்த அழுத்தமும் அதிகமாகத்தான் இருக்கும், சர்க்கரை அளவிலும் ஏற்ற இறக்கங்கள்
இருக்கத்தான் செய்யும்.
முழு உடல் பரிசோதனை முடிவில்
உங்களுக்கு இருக்கின்ற, இல்லாத நோய்களுக்கு மருந்துகள் சாப்பிட ஆரம்பித்து
படிப்படியாக உங்களை நீங்களே நோயாளியாக மாற்றிக் கொள்வீர்கள்…
40 வயது ஆகிவிட்டாலே சர்க்கரை நோயும்,இரத்த அழுத்தமும் வருவது வேலை டென்ஷனால்தான் என்று நினைக்கிறார்கள் . அடிப்படையில் சர்க்கரை நோய்க்கான காரணம், இரத்த அழுத்தம் உயர்வதற்கான காரணமும் வேலை டென்ஷனால் அல்ல…
நாம் நம் உடலை சரியாக கவனிக்காமல்
இருப்பதே நீரிழிவு, BP நோய்களுக்கான ஆரம்ப காரணம்…
யார் யாரெல்லாம் போருக்கு போவது போல்
அவசர அவசரமாக அள்ளி விழுங்கி சாப்பிட்டு, போதாதற்கு ஒரு செம்பு தண்ணீரும் குடித்து
விட்டு, பசியில்லாத நிலையிலும் வயிறு நிறைய சாப்பிட்டு, அதிகப்படியான உடல் உழைப்பு
இல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்க்கிறார்களோ, வீட்டு வாசலில் வாகனத்தில்
கிளம்பி அலுவலக வாசல் வரைக்கும் வாகனத்திலேயே சென்று, அலுவலகத்திலும் இயற்கையான
காற்றோட்ட வசதி இல்லாமல் ஏர்கண்டிசனர் ரூம்களில் வேலை செய்கிறார்களோ அவர்களுக்குத்
தான் சர்க்கரை நோயும் வருகிறது உடல் எடையும் கூடுகிறது.
மேற்கண்ட விஷயங்களை மாற்றாமல்
எக்காலத்திலும் உங்களால் நீரிழிவு
நோயை முழுமையாக சரி செய்ய முடியாது
உடல் எடையைக் குறைக்கவும் முடியாது.
கான்சர் நோய் வந்தால் கூட 6 மாதங்கள்
மட்டும் மருந்து சாப்பிட்டாலே குணமாகி விடும், ஏன் தொழுநோய்க்கு கூட கூட்டு
மருந்து சிகிச்சை என 6 மாதங்கள் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை
அளிக்கப்படுகிறது. ஆனால் சர்க்கரை நோயாளிகள் யாராவது 2 வருடங்கள் அல்லது 5
வருடங்கள் மருந்து சாப்பிட்டார் சர்க்கரை நோய் சரியாகி விட்டது என்று கேள்விப்
பட்டிருக்கிறீர்களா?
இதுவரைக்கும் கண்டிப்பாக கேள்விப்
பட்டிருக்க மாட்டீர்கள், இனிமேலும் சாத்தியமில்லை.
ஏனென்றால் உங்களை சர்க்கரை, BP
நோயாளியாக மட்டுமே வாழ்நாள் முழுவதும் வைத்திருந்து
உங்களிடம் மாத்திரை மருந்துகள் விற்பது மட்டுமே ஒரு சில நிறுவனங்களின் நோக்கமே…
மேலே சொல்லப்பட்ட அனைத்து
விஷயங்களையும் சரியாக பின்பற்றி, அத்துடன் உடலுழைப்பையும், உடற்பயிற்சியையும்
சேர்த்து, அன்றாடம் சூரிய ஒளியிலும் குறைந்தது ஒரு அரை மணி நேரமாவது சென்று வந்து,
ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்டு வந்தால் சர்க்கரை நோய் வராமலும்
தடுக்கலாம்,
சர்க்கரை நோய் உள்ளவர்களும் மேற்கண்ட
அனைத்து விஷயங்களையும் தீவிரமாக பின்பற்றி அத்துடன் இயற்கை மருந்துகளை மட்டுமே
சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை குணப்படுத்த முடியும்…
சர்க்கரை நோயை வெல்லும் மூலிகை 'மூர்த்திகள்'!
இந்தியாவில் பெரும்பாலோனோர் சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு நோயினால்
பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான மூலிகைகள் சர்க்கரை நோய்க்கு மருந்தாக
உள்ளன. நம் கண் முன்னே கிடைக்கும் மூலிகைகளின் பலன்களை தெரிந்து கொள்ளலாம்.
பொன்குறண்டி
பொன் குறண்டி என வழங்கப்படும் மூலிகை சமீபகாலமாக சர்க்கரை நோய்க்கான
ஆய்வுகளில் பெரிதும் ஈடுபடுத்தப்படுகிறது. அமெரிக்காவில் ஓஹியோ
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வுகளில் இம் மூலிகை ரத்த சர்க்கரை அளவை 29
சதவீதம் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது நாம் உண்ணும் உணவு
குளுகோஸாக மாறும் வேகத்தைக் குறைப்பதாகவும் அதனால் நோயளிகளுக்கு இன்சுலின்
தேவை குறைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆவாரை
ஆவாரையின் இலை, பூ, பட்டை, வேர் என ஐந்து உறுப்புகளுமே நீரிழிவில்
பயன்படுகின்றன. அதிக அளவில், அடிக்கடி சிறுநீர் போவதைக் குறைப்பதால்,
காவிரி நீரையும், கடல் நீரையும் வற்றச் செய்யும் எனச்
சிறப்பிக்கப்பட்டுள்ளது. நவீன ஆய்வுகளில் ஆவாரை சர்க்கரை, அளவைக்
கட்டுப்படுத்துவது மட்டுமன்றி, இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவைக் குறைப்பதால்
இதயத்தை பாதுகாப்பதாகவும், ஹீமோ குளோபின் அளவு, தரம் ஆகியவற்றை
அதிகரிப்பதாகவும் நிரூபித்துள்ளனர்.
சிறுகுறிஞ்சான்
"சர்க்கரைக் கொல்லி"யாகிய சிறுகுறிஞ்சான் கணையத்துக்கு மறுவாழ்வு
அளிக்கிறது. ஆம் - இது கணையத்தில் இன்சுலின் சுரப்பிக்கும் பீட்டா
செல்களைப் புதுப்பித்து அவற்றின் எண்ணிக்கையை இரு மடங்காக்குவதாக தற்பொழுது
நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் இயற்கையாகவே இன்சுலின் சுரப்பு
அதிகமாவதாலும், குடலில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைப்பதாலும்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் ரத்தத்தில் கொலஸ்டிரால்,
டிரைகிளிசரைடு ஆகியவற்றின் அளவைக் குறைப்பது மட்டுமன்றி, நல்ல கொழுப்பான
H.D.L. ன் அளவை அதிகரிக்கவும் செய்கிறது. மாரடைப்புக்குக் காரணமாகும்
ரத்தக் குழாய் கொழுப்புப் படிவைத் தடுக்கிறது.
சீந்தில்
நலவாழ்வை நீட்டிக்கும் காய கற்ப மூலிகை, இரத்த சர்க்கரை அளவைக்
கட்டுப்படுத்துவது மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்திக்குக் காரணமான
"இம்யூனோகுளோபுலின் - ஜி" - ன் அளவை, அதிகப்படுத்துகிறது. கொலஸ்டிராலைக்
குறைக்கிறது. சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் எடைக் குறைவைத் தடுக்கிறது.
பாகல்
பாகல் இலை, காய், விதைகளில் "தாவர இன்சுலின்" என்ற புரதச் சத்து உள்ளது.
சோதனைகளில், இது இன்சுலின் போல் செயல்படுவதாகவும், இன்சுலின் சார்ந்த
மற்றும் இன்சுலின் சாராத இருவகை நோயர்களுக்கும் பயன்படுவதாகவும்,
கணையத்தில் செயல்பட்டு பீட்டா செல்களை உயிர்ப்பிப்பதாகவும்
கண்டறியப்பட்டுள்ளது. இரத்தத்தில் சர்க்கரை அளவை 50% வரை குறைக்கிறது.
சர்க்கரை விழித்திரை நோயைத் தடுக்கிறது. நரம்புகளின் பாதிப்பையும் சரி
செய்கிறது. சர்க்கரையிலிருந்து கொழுப்பு உண்டாவதை அதிகரிப்பதாகவும்,
கொழுப்பில் இருந்து சர்க்கரை உருவாகி இரத்தத்தில் கலப்பதைக் குறைப்பதாகவும்
தெரிகிறது.
வெந்தயம்
இதில் காணப்படும் "ட்ரைகோனெல்லின்" அதிகரித்த இரத்த சர்க்கரை அளவைக்
குறைப்பதோடு, கொலஸ்டிராலையும் 25% அளவு குறைக்கிறது. எனவே மாரடைப்பு
ஏற்படாமல் காக்கிறது. குடலில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக்
குறைக்கிறது.
வில்வம்
சிவனுக்குரிய மூலிகையாகக் கருதப்படும் வில்வம் அனைத்து நோய்களையும்
தடுக்கும் மாமருந்தாக நம் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. வில்வ
இலையிலிருந்து கிடைக்கும் பாஸ்பேட் சர்க்கரை நோயைக் குறைப்பதோடு,
நோயர்களின் திசுக்களுக்கு அதிக பிராணவாயு கிடைக்கச் செய்வதன் மூலம்
சோர்வடையாமல் காக்கிறது. சர்க்கரை நோயின் காரணமாக ஏற்படும் இதய இரத்தக்
குழாய் அடைப்பைத் தடுப்பதாக சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
நாவல்
நாவலின் பட்டை, பழம், விதை ஆகிய மூன்றும் பாரம்பரியமாக சித்த
மருத்துவத்தில் நீரிழிவுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக நாவல்
விதை மற்றும் விதையின் மேல்தோல் ஆகியவை இன்சுலின் அளவை அதிகரிப்பதை நவீன
ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. மேலும் சர்க்கரை நோயில் உண்டாகும் சிறுநீரக,
கல்லீரல் மாற்றங்களை நாவல் விதை சரி செய்கிறது.
மஞ்சள்
தன்னிடம் இல்லாத மருத்துவக் குணமே இல்லை என்னும் அளவுக்கு, எண்ணற்ற
சோதனைகள் மூலம் நோய் தடுப்பாற்றலை அதிகரிப்பதாகவும், கிருமி நாசினியாகவும்,
உடல் தேற்றியாகவும், ஜலதோஷம், காய்ச்சல் முதல் புற்று நோய் வரை அனைத்து
நோய்களிலும் பயனளிப்பதாக நிரூபணம் செய்யப்பட்டுள்ள மஞ்சள் நீரிழிவு
நோயையும் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக நெல்லிவற்றலுடன் சேர்ந்து
வழங்கும்போது சர்க்கரை நோயில் அதிக பலன் அளிப்பதுடன், நீண்ட கால பின்
விளைவுகளைத் தடுத்து சிறுநீரக செயலிழப்பு, அதிக ரத்தக் கொழுப்பு
ஆகியவற்றையும் தடுக்கிறது.
மேலும் வேம்பு, வேங்கை, கொன்றை, மருது, கறிவேப்பிலை, கடுகு ரோகிணி ஆகிய
மூலிகைகளும் சர்க்கரை நோயில் பலன் அளிப்பதை தற்கால ஆய்வுகள் உறுதி
செய்கின்றன.
மூலிகை மருந்துகள், உணவுச் சீரமைப்பு, தக்க உடற்பயிற்சி, ஆகிய
மும்மூர்த்திகள் உதவியுடன் சர்க்கரைநோயை வெல்ல நிச்சயம் முடியும்
சர்க்கரை நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள மற்றும் சர்க்கரை நோய் தொடர்பான மற்ற நோய்களையும் சித்த, ஆயுர்வேத முறையில் சரிசெய்ய, மேலும் தெரிந்து கொள்ள,
K7 Herbo Care,
13/A, New Mahalipatti Road,
Madurai-625001.
CELL & Whatsapp 1: +91-9629457147
CELL & Whatsapp 2: +91-9025047147