உடல் வலி எல்லாம் பறந்து போக...

உடல் வலி எல்லாம் பறந்து போக...

நாட்டு கருவேல மரத்தின் பச்சைக் காய்களை 100 கிராம் அளவில் சேகரித்துக் கொள்ளவும். இதை தண்ணீர் விட்டு விழுதாய் அரைத்துக் கொள்ளவும். சுத்தமான செக்கு நல்லெண்ணெய் ஒரு லிட்டர் எடுத்து அடுப்பிலேற்றவும். எண்ணெய் கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்த விழுதை அதில் சேர்க்கவும். தண்ணீர் எல்லாம் நன்கு வற்றி வண்டல் பதம் வந்த பின்னர் இந்த தைலத்தை ஆற வைத்து வடிகட்டிக் கொள்ளவும்...

     இந்த தைலத்துடன் மறுபடியும் 20 கிராம் தேன் மெழுகு சேர்த்து நன்கு காய்ச்சவும். மறுபடியும் தைல பதத்தில் இறக்கிவிடவும். இந்த எண்ணெயை உடல் முழுக்க பூசி மசாஜ் செய்தால், உடல் வலியெல்லாம் பறந்து போகும். உடைந்த எலும்புகளைக்கூட ஒன்று சேர்க்கும் தன்மை இந்த எண்ணெய்க்கு உண்டு. இதே எண்ணெயை தலைக்குத் தேய்த்தால் முடி கருமையாக வளரும்.