மருக்கள் நீக்க குறிப்புகள்....

மருக்கள் நீக்க குறிப்புகள்.:

* தினமும் ஒரு துண்டு இஞ்சியை சாறு எடுத்து மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும். இப்படியே தினமும் தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்களானது தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.

* அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து, அதனை மரு உள்ள இடத்தில் தேய்த்து 25 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

* சிறிய வெங்காய சாற்றினைக் கொண்டு தேய்த்தாலும் மருக்கள் மறையும். அதிலும் இரவில் படுக்கும் முன், வெங்காயத்தை இரண்டாக வெட்டி உப்பு தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

* ஆப்பிள் சீடர் வினிகரை மரு உள்ள இடத்தில் சிறிய பஞ்சில் தொட்டு மரு மேல் ஒட்டி வைத்து விட வேண்டும், அது விரைவில் உதிர்ந்துவிடும்.

* இந்த முறைக்கு முதலில் சருமத்தில் சோப்பு கொண்டு தேய்த்து கழுவி விட்டு, பின் டீ ட்ரீ ஆயிலை மரு உள்ள இடத்தில் ஒரு சிறிய (காது குடையும்) பட்ஸில் தொட்டு தடவ வேண்டும். இதனால் சிறிது எரிச்சலும், வலியும் இருக்கும். இருப்பினும், இதனை தினமும் திரும்ப திரும்ப மூன்று முறை செய்து வந்தால், மருக்களானது எளிதில் உதிரும்.

* எலுமிச்சை சாறு எடுத்து மரு உள்ள இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து கழுவினாலும், மருக்கள் சீக்கிரம் போய்விடும்.

* பூண்டு சாற்றினை மருக்கள் இருக்கும் இடத்தில் தடவி ஒரு துணியைக் கொண்டு கட்டி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். மேலும் இந்த முறையை தினமும் மூன்று முறை செய்து வர, நல்ல மாற்றம் தெரியும்.

* அகத்தி கீரைச்சாறில் கடல் சங்கை நல்ல வழுவழுப்பான சந்தனம் அரசும் கல்லின் மீது உரசி இழைத்து மருக்கள் மீது தடவினால் விரைவில் உதிர்ந்து விடும்.

* ஆளி விதையை அரைத்து, அதனுடன் ஆளி விதை எண்ணெய் மற்றும் சுத்தமான தேன் சிறிதளவு சேர்த்து கலக்கவும். இந்த பேஸ்டை மருவின் மீது தடவி, அதன் மேல் பேன்டேஜ் ஒட்டவும்.

* அன்னாசிப்பழத்தை அவ்வப்போது வெட்டி, மருக்கள் உள்ள பகுதியின் மீது தடவி வந்தால் மருக்கள் நீங்கும்.

* அத்திப்பழச் சாறு எடுத்து, அதனை ஒரு நாளில் பலமுறை, பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவி வருவது மருக்களைப் போக்குவதற்கான சிறந்த மருத்துவ முறைகளுள் ஒன்றாகும்.

* கற்பூர எண்ணெய், மருக்களை போக்கும் ஆற்றலை கொண்டது. பாதிக்கப்பட்ட பகுதியின் மீது கற்பூர எண்ணெயை ஒரு நாளில் பலமுறை தடவி வர வேண்டும்.