கழற்சிக் காயின் மருத்துவ குணங்கள்... கழற்சிக் காய் தொழுநோயை கூட குணமாக்கும் !

 கழற்சிக் காயின் மருத்துவ குணங்கள்... கழற்சிக் காய் தொழுநோயை கூட குணமாக்கும் ! 

நமது நாட்டில் சில இடங்களில் அதிகளவில் காணப்படும் ஒரு வகை கொடி வகை தாவரம் தான் கழற்சிக்காய். கழற்சிக்காயின் இலைகள், காம்புகள், விதைகள், வேர்கள் என அனைத்தும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. இந்த கழற்சிக்காயின் ஆரோக்கிய நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தொழுநோய் :
நாம் தொழுநோய் பாதிக்கப்பட்ட பலரை குறித்து கேள்விப் பட்டிருப்போம். இது மிக கொடிய வியாதி ஆகும். இது ஒரு வகைக் கிருமி உடலில் தொற்றிக் கொள்வதால் கை, கால், விரல்கள், மூக்கு, உதடு போன்ற உறுப்புகள் மற்றும் உடலின் பிற பாகங்கள் போன்றவற்றை பாதித்து, அவற்றை அழுகிப் போகச் செய்யும். வறுத்த கழற்சிக்காய் விதைகளை பொடியாக்கி தினமும் ஒரு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் தொழுநோய் விலகும்.

வாதம் :
உடலின் வாதம் அதிகரிக்கும் போது பக்கவாதம், கை, கால்கள் மற்றும் இடுப்பு, மூட்டுகளில் விறைப்புதன்மை மற்றும் வலி ஏற்படுகிறது. இதற்க்கு கழற்சி கொடியின் இலைகளை நன்கு அரைத்து மூட்டு பகுதிகளில் தடவி வந்தால் விறைப்பு தன்மை மற்றும் வலி நீங்கும். மேலும் கழற்சிக்காய் விதைகளை கொண்டு செய்யப்பட்ட மருந்தை சாப்பிட்டு வந்தால் வாதம் குறையும்.

வயிற்றுப் பிரச்சனைகள் :
வயிறு சம்மந்தபட்ட நோய்களுக்கு கழற்சிக்காயின் இலைகள் மற்றும் விதைகளை அரைத்து செய்யப்பட்ட தூளை சிறிதளவு நீரில் கலந்து பருகி வர வயிற்று பிரச்சனைகள் நீங்கும்.

வீக்கம் :
உடலின் சில பாகங்களில் சுளுக்கு ஏற்படுவதால் அப்பகுதியில் அதிகளவில் வீக்கம் ஏற்படுகிறது. கழற்சிக்காய் இலைகள், விதைகள் போன்றவற்றை அரைத்து வீக்கம் ஏற்பட்ட இடங்களில் தொடர்ந்து பூசி வந்தால் வீக்கங்கள் விரைவில் குறையும்.

ஈரல் :
நாம் உண்ணும் உணவுகளில் இருக்கும் நச்சுத்தன்மையை அழிப்பது மற்றும் நமது உடலில் ஏற்படும் நோய்களை எதிர்த்து நிற்கும் நோய் எதிர்ப்பு திறன் போன்றவைகளை நமது ஈரல் செய்து வருகிறது. கழற்சி கொடியின் காம்புகளை பக்குவம் செய்து சாப்பிடும் போது நமது ஈரல் பலம் பெறும். அதன் செயல்பாடுகளும் மேம்பாட்டு உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

விரை வீக்கம் :
ஆண்களுக்கு அடிபடுவதாலோ அல்லது வேறு ஏதாவது காரணங்களாலோ அவர்களின் விரைகள் வீங்கிவிடும். இப்படியான சமயங்களில் விளக்கெண்ணெயில் கழற்சி சூரணத்தை போட்டு காய்ச்சி, வடிகட்டப்பட்ட தைலத்தை வீக்கம் ஏற்பட்டுள்ள விரைகள் மீது மேல்பூச்சு மருந்தாக தடவி வந்தால் விரைவீக்கம் நீங்கும்.

யானைக்கால் வியாதி :
ஒரு வகை கொசு கடிப்பதால், அதனிடமிருந்து பரவும் கிருமி உடலில் தொற்றி கால்கள், நிண நீர் சுரப்பிகளையும் பாதிக்கும். இதனை யானைக்கால் வியாதி என்று கூறுவர். இதற்க்கு கழற்சிக்காய் கொடிகளின் இலைகளை பக்குவம் செய்து உள்மருந்தாக சாப்பிட்டு வந்தால் உடலில் தங்கியிருக்கும் யானைக்கால் வியாதியை பரப்பும் தொற்றுண்ணிகளை அழிக்கிறது.

வலிப்பு :
கழற்சிக்காய் விதைகளை கொண்டு செய்யப்பட்ட சூரணத்தை கை, கால் வலிப்பு குழந்தைகளுக்கு அவ்வப்போது கொடுத்து வந்தால் வலிப்பு ஏற்படுவது குறையும்.

மாதவிடாய் :
மாதம்தோறும் ஒழுங்காக மாதவிடாய் வராத பெண்கள் கழற்சிக்காய் விதைகளை கொண்டு செய்யப்பட்ட சூரணத்தை சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை விலகும் மற்றும் கருப்பையையும் வலுப்படுத்தும்.

புண்கள் :
நீண்ட நாட்களாக ஆறாத புண்கள் மற்றும் காயங்களில் அரைத்து தூளாக்கப்பட்ட கழற்சிக்காய் தூளை தினமும் சிறிதளவு நீர் விட்டு குழைத்து பற்றிட்டு வர அவை சீக்கிரம் குணமாகும். தழும்புகள் ஏற்படுவதையும் தடுக்கும்.