பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்!!

பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்!!

பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. சத்துக்கள் மிகுந்தது. இதில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைய இருக்கிறது. பல்  சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி பழம் சாப்பிட்டால் போதும்.

 நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய்  குறைபாடு சீராகும்.அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது.

 எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது  இவர்களை தாக்காது.பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷ கிருமிகளை கொல்லும் ஒருவகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில்  நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக்காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

 பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல்  பூச புண்கள் ஆறும்.பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்

. கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும்.முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி. அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து. வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம அருமருந்து பப்பாளி. பப்பாளி பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி  குணமாகும்.

 முக்கியமான குறிப்பு 

பப்பாளி பழத்தை அரியும்போது விதைகள் நிறைய இருந்தால் மட்டுமே உண்வாகவோ மருந்தாகவோ எடுத்துக்கொள்ளவும். வணிக நோக்கோடு பப்பாளி மரங்களில் பால் எடுத்தபிறகு கிடைக்கிற பழத்தில் எந்தவித சத்துக்களும் இல்லை விதைகளும் இருப்பதில்லை.