குப்பை உணவுகள்...
பிஸ்கெட், பிரெட், சாக்லேட் உணவுகளும் குழந்தைகளும்... குழந்தைகள் உள்ள வீடுகளில் பிஸ்கெட் போன்ற உணவுகளை எப்படியும் வாங்கி வைத்திருப்பார்கள். ஏனெனில் குழந்தைகளுக்கு அடிக்கடி பசி எடுக்கும்। அதற்கு எளிய வழி இந்த பிஸ்கெட் உணவுகள். ஆனால் இவை குழந்தைகளின் உடலை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று நாம் உணரவில்லை. இந்த தயார் நிலை உணவுகளில் பல விதமான உடலுக்கு ஒவ்வாத பொருட்களை சேர்த்து தான் பதப்படுத்துகிறார்கள். இதில் சேர்ந்துள்ள சுத்திகரிக்கப்பட்ட மைதா, எண்ணெய்கள், கொழுப்பு மற்றும் வெள்ளை சீனி போன்ற கெமிக்கல் கலந்த பொருட்கள் முதலில் தாக்குவது குழந்தைகளின் நினைவுத் திறனை தான். பிஸ்கெட் மற்றும் பொதி செய்யப்பட்ட பால் போன்றவற்றை உண்ணும் குழந்தைகள் வீட்டு உணவில் என்றும் நாட்டம் கொள்வதில்லை. விளைவு உடல் பருமன், மந்த நிலை, அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொள்வர். நோய்வாய்ப்பட்டதும் மீண்டும் மருந்துகள் என்ற ரசாயனம் உடலில் வந்து சேரும். இப்படி எல்லா ரசாயனங்களும் அந்த பிஞ்சு உடலை எவ்வளவு பாதிக்கும் என்று பெற்றோர்கள் கொஞ்சம் நினைத்து பொறுப்போடு செயலாற்றுவது மிக முக்கியமானதாக இருக்கின்றது. தய