Posts

குப்பை உணவுகள்...

பிஸ்கெட்,  பிரெட், சாக்லேட் உணவுகளும் குழந்தைகளும்... குழந்தைகள் உள்ள வீடுகளில் பிஸ்கெட் போன்ற உணவுகளை எப்படியும் வாங்கி வைத்திருப்பார்கள். ஏனெனில் குழந்தைகளுக்கு அடிக்கடி பசி எடுக்கும்। அதற்கு எளிய வழி இந்த பிஸ்கெட் உணவுகள். ஆனால் இவை குழந்தைகளின் உடலை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று நாம் உணரவில்லை. இந்த தயார் நிலை உணவுகளில் பல விதமான உடலுக்கு ஒவ்வாத பொருட்களை சேர்த்து தான் பதப்படுத்துகிறார்கள். இதில் சேர்ந்துள்ள சுத்திகரிக்கப்பட்ட மைதா, எண்ணெய்கள், கொழுப்பு மற்றும் வெள்ளை சீனி போன்ற கெமிக்கல் கலந்த பொருட்கள் முதலில் தாக்குவது குழந்தைகளின் நினைவுத் திறனை தான். பிஸ்கெட் மற்றும் பொதி செய்யப்பட்ட பால் போன்றவற்றை உண்ணும் குழந்தைகள் வீட்டு உணவில் என்றும் நாட்டம் கொள்வதில்லை. விளைவு உடல் பருமன், மந்த நிலை, அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொள்வர். நோய்வாய்ப்பட்டதும் மீண்டும் மருந்துகள் என்ற ரசாயனம் உடலில் வந்து சேரும். இப்படி எல்லா ரசாயனங்களும் அந்த பிஞ்சு உடலை எவ்வளவு பாதிக்கும் என்று பெற்றோர்கள் கொஞ்சம் நினைத்து பொறுப்போடு செயலாற்றுவது மிக முக்கியமானதாக இருக்கின்றது. தய

உடல் சக்தியை பெருக்கும் இளநீர் - உணவே மருந்து :

உடல் சக்தியை பெருக்கும் இளநீர், உணவே மருந்து... இயற்கையின் வரப்பிரசாதம் தான் இளநீர். மனிதனின் அன்றாட வாழ்க்கையில் கலந்துவிட்ட பானங்களுள் இளநீருக்கு முக்கிய பங்குண்டு. இந்த இளநீர் ஒரு முழுமையான உணவு. இது மக்களின் நீர் தாகத்தைப் போக்குவதுடன் உடலுக்கு உற்சாகத்தையும், குளிர்ச்சியையும் கொடுக்கும் இயற்கை டானிக் ஆகும். இளநீரில் மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவக் குணங்கள் உள்ளது. இது மிகவும் சுத்தமானதும், சுகாதாரமானதும் ஆகும். இத்தகைய இளநீரில் நாட்டு இளநீர், செவ்விளநீர், பச்சை இளநீர் என பல வகைகள் உள்ளன. இளநீர் அருந்துவதால் என்ன பயன்? தினமும் இளநீர் அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். கண்கள் குளிர்ச்சி பெறும். வயிற்று நோய்கள் அகலும். பட்டினி, அதிக உணவு, உடலுக்கு ஒவ்வாத உணவு  இவற்றால் ஏற்படும் அஜீரணக் கோளாறு அனைத்தையும் இளநீர் தீர்க்கும். இளநீர் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை நீக்கும் வேலையைச் செம்கிறது மற்றும் இரத்தச் சோகையைப் போக்குகிறது. இரத்தக் கொதிப்பைக் குறைப்பதால் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாகும். நாவறட்சி, தொண்டைவலி ஆகியவை நீங்கு

மைதா எனும் ரசாயனத்தை உணவாக சாப்பிடுவோர் கவனத்திற்கு ........

மைதா எனும் ரசாயனம் ........ இன்று "மைதா" என்ற சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு உணவு தயாரிப்பில் முன்னணி வகித்து வருகிறது. புரோட்டா, பூரி, நான், சமோசா, பிஸ்கட், கேக், பிரெட், பீட்ஸா, பர்கர் போன்ற பேக்கரி அயிட்டங்கள் மற்றும் Junk Food அயிட்டங்கள் அனைத்துக்கும் மைதாவை தான் அதிகமாக உபயோகித்து வருகிறார்கள். மக்களும் விரும்பி உண்ணும் உணவுகளும் இவையே தான். மெல்லக் கொல்லும் விஷம் ஆனால் இந்த மைதா உணவின் பின்னே இருக்கும் அதி பயங்கர ஆரோக்கிய சீர்கேடுகளை தெரிந்துக் கொண்டால் நிச்சயம் மைதா உணவுகளை அச்சத்தோடு தான் உண்ணுவீர்கள். ஏனெனில் மைதா என்பது உடலை சிறுகச் சிறுக கொல்லும் ஒரு விஷம். எந்த சத்துக்களும் இல்லாத குப்பை உணவு முதலில் முழுக் கோதுமையின் வெளித் தோலை அகற்றுவது மூலம் நார்ச்சத்துக்கள், கால்சியம், இரும்புசத்து, பொட்டாசியம் போன்ற கனிமச்சத்துக்கள் அனைத்துமே முழுவதுமாக நீக்கப்படுகிறது. மிஞ்சி எஞ்சி இருப்பது கொழுப்பாக மாறும் மாவு சத்து மட்டுமே. நீங்கள் உண்பது இரசாயனங்களை மட்டுமே அடுத்ததாக கோதுமையை வெளேர் என்று வெண்மைப் படுத்தவும், அதனை மென்மைப் படுத்தவும், நீண்ட காலம் பாதுகாக்கவும் உபயோகிக்

கூந்தல் அடர்த்தியாக வளர இதுவும் ஒரு கூடுதல் குறிப்பு...

கூந்தல் அடர்த்தியாக வளர இதுவும் ஒரு கூடுதல் குறிப்பு... தலை முடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக வெங்காயம் உதவுகிறது. இதற்கு என்ன காரணம் என்றால் வெங்காயத்தில் இருக்கும் சல்பர் தான் முக்கிய காரணம் ஆகும். * பெரிய வெங்காயம் சமையலுக்கு மட்டுமல்ல, முடி வளர்ச்சிக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. எப்படி? என்று தெரிந்து கொள்ளுங்கள். இது கூந்தலை அடர்த்தியாக வளர உதவுகிறது. * வெங்காயத்திற்கு நுண் கிருமிகள் மற்றும் பூஞ்சையை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது. இதை தலை முடியில் பயன்படுத்துவதால் முடி கொட்டுவது தடுக்கப்படுகிறது. * வெங்காயத்தை தொடர்ந்து பயன்படுத்தும் போது முடியின் பளபளப்பு அதிகமாகிறது. தலை மற்றும் கழுத்து பகுதியில் புற்று நோய் வரும் அபாயத்தை குறைக்கிறது. பேன் தொல்லை குறைகிறது. வெங்காய சாறு பயன்படுத்துவதால் முடியின் அடர்த்தி அதிகரிக்கும். செயல்முறை * வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின் மிக்ஸியில் நன்றாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.  * பின் ஒரு துணியில் நன்றாக வடிகட்டி எடுத்து கொள்ளவும். பின் வெங்காயச் சாற்றை எடுத்து தலையில் நன்றாக தடவவும். விரல்களால் சுழல் வடிவத்தில் நன்றா

ரோஜா ரோஜா...

ரோஜாப் பூவில் உள்ள மருத்துவ குணங்களும் மற்றும் சில நோய்களுக்கான தீர்வுகளும்... Anti Ageing ரோஜாவில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி, ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். வைட்டமின் சி'யின் முக்கியத்துவம் என்னவெனில், இது சருமத்தில் இருக்கும் செல்களை சேதமடையாமல் பாதுகாக்கிறது.  கர்ப்பிணிகளின் மலச்சிக்கலுக்கு மாமருந்து ரோஜாப் பூ கற்கண்டு தேன் கலந்து வெயிலில் வைத்து 1 கிராம் சாப்பிட்டு வர சிறுநீரகம் மற்றும் இதயம் பலமாகும். மலச்சிக்கல் தீரும். வாய் துர்நாற்றம் நீங்க வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்களின் வாயில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கும். அவர்களிடம் முகம் கொடுத்து கூட பேச முடியாது. இந்த பிரச்சினையில் இருந்து விடுபட, வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளும் போதே, அதனுடன் சிறிது ரோஜா இதழ்களையும் சேர்த்து மென்றுவர  அந்த வாய் துர்நாற்றம் நீங்கிவிடும். சீதபேதி குணமாக  ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலை, மாலை ஆகிய இருவேளை அப்படியே சாப்பிட்டு  வர சீதபேதி இரண்டொரு நாளில் குணமாகிவிடும். ரோஜாப் பூவை கஷாயம் செய்து கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும். மேலும் ரணங்களை கழுவ,

தயிர் சாப்பிடுவதில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

தயிர் சாப்பிடுவதில் இத்தனை நன்மைகள் உள்ளதா? தினமும் தயிரை சாப்பிடுவதால், இதயம் வலுப்பெறும். உயர் ரத்த அழுத்தம் ஏற்படாது. தயிரை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படும். மேலும் பெண்களுக்கு பிறப்புறுப்பில் வரும் தொற்றுக்களை எதிர்க்கிறது. சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு சூரிய ஒளியினால் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறுகளைப் போல உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் சி-யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌ கொ‌ண்டு‌ள்ளது.   மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கிற்கு மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து. அ‌பெண்டிக்ஸ் ஐடிஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியடிக்கப்படும்.   அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே  தயிர் ரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தக்கூடியது. தொடர்ந்து தயிர் சாப்பிட்டால் உடல் வீக்கம், அரிப்பு, அக்கி போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தயிர் சாப்பிடுவதன் மூலம் உடலில் கொழுப்பு அதிகம

வெற்றிலை போடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது....

வெற்றிலைக்குள் புதைந்திருக்கும் மருத்துவ குணங்கள் வெற்றிலை போடுவது ஒரு அநாகரீகச்செயல் என்றும், பழுப்பு நிறப் பற்களைப் பார்த்து கேலி செய்வதும் வழக்கமாக உள்ளது.  உண்மையில் வெற்றிலை போடுவது ஒரு நல்ல பழக்கம் ஆகும். அது அருவருக்கத்தக்கதாகவும், அபாயகரமானதாகவும் ஆனது, அதை நாம் கையாண்ட விதத்தினால் தான்!  அளவுக்கு மீறினால் அமுதமும் விஷமாகும்; (அளவோடு குடித்தாலும் கோலாக்கள் கடும் விஷமாகும்) அதுவும் நல்லது என்று ஒரு பழக்கத்தை ஆரம்பித்தால், அதை கேடு விளைவிக்கக் கூடியதாக மாற்றுவது நமக்குக் கைவந்த கலை!! மருத்துவரைக் கேளுங்கள்: “வெற்றிலை போடாதீர்கள்! அது கெடுதல் தரும் கேன்சரைக் கொண்டு வரும்” என்பார். ஆங்கிலேயனாகட்டும்; அவன் இந்தியாவில் பரப்பிய (பக்கவிளைவு தரும்) அலோபதி மருத்துவமாகட்டும்; அலோபதி மருத்துவர்களாகட்டும்; இவர்களுக்கு நமது முன்னோர்களையும், பழங்கால இந்துப் பண்பாட்டையும் குற்றம் சொல்வது வழக்கமான நிலையில், வெற்றிலையுடன் அநாவசியமான, லாகிரி வஸ்துக்கள் (போதைப் பொருட்கள்) சேர்த்துச் சாப்பிட்டால் ஏன் சொல்ல மாட்டார்கள்? வெற்றிலையுடன் சேர்க்கும் பாக்கு, புகையிலை போன்றவற்றால் தான் உடலுக்கு கெடுதல் உண்