குழந்தைகளின் காய்ச்சல் இருமல், சளிக்கு நிவாரணம்


குழந்தைகளின் காய்ச்சல் இருமல், சளிக்கு நிவாரணம்

குழந்தைகளுக்கு சளி, இருமல் பிடித்து விட்டாலோ காய்ச்சல் வந்து விட்டாலோ குழந்தைகள் படும் கஷ்டமும், அதைவிட குழந்தைகளுக்கு சரியாகும்வரை பெற்றோர் படும் கஷ்டமும் சொல்லி மாளாது.

குழந்தைகளுக்கு சளி, இருமல் என்று மருத்துவமனைகளுக்கு போனாலே இருமலுக்கான சிரப்-களும், சளியை உள்ளேயே இருத்தி வைக்கும் ஆன்டி-பயாடிக் மாத்திரைகளோ அல்லது டானிக்-களோ கொடுத்து குழந்தைகளின் சளி, காய்ச்சல் அப்போதைக்கு சரி செய்யப்படுகிறது. இப்படி தற்காலிகமாக குணப்படுத்தப்படும் குழந்தைகளுக்கு சளியும் காய்ச்சலும் திரும்ப திரும்ப வந்து கொண்டேதான் இருக்கும்.

குழந்தைகளுக்கு நிரந்தரமாக இந்த பிரச்சினைகளை சரி செய்ய வேண்டுமென்றால் கண்டிப்பாக சித்த, இயற்கை வைத்தியத்திற்கு மாறியே தான் ஆக வேண்டும்.

குழந்தைகளின் சளி, இருமலுக்கு

கஸ்தூரி மாத்திரை
கோரோசனை மாத்திரை

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றால் தலா ஒரு மாத்திரை தேனிலோ அல்லது தாய்ப்பாலிலோ மாத்திரைகளை பொடித்து கலந்து கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு இருமுறை இதே போல கொடுத்து வர சளி, இருமல் முழுமையாக குணமாகும்.

குழந்தைகளின் காய்ச்சலுக்கு

அமிர்தாதிக் குளிகை
பால சஞ்சீவி மாத்திரை

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றால் தலா ஒரு மாத்திரை தேனிலோ அல்லது தாய்ப்பாலிலோ மாத்திரைகளை பொடித்து கலந்து கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு இருமுறை இதே போல கொடுத்து வர காய்ச்சல் முழுமையாக குணமாகும். இத்துடன் நிலவேம்பு கஷாயமும் கொடுக்கலாம். 

இந்த மருந்துகள் கொடுத்தும் இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுங்கள்.
மேற்கண்ட மருந்துகளைப் பற்றிய முழு விபரங்களும் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளன. மேலே குறிப்பிட்ட மருந்துகளை IMPCOPS Brand-ல் வாங்கி கொடுக்கவும். IMPCOPS மருந்துகள் IMPCOPS Store-களிலும், மற்ற சித்த, ஆயுர்வேத மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

 
அமிர்தாதிக் குளிகை 1


 
அமிர்தாதிக் குளிகை 2


 
பால சஞ்சீவி மாத்திரை 1


 
பால சஞ்சீவி மாத்திரை 2


 
கஸ்தூரி மாத்திரை 1


கோரோசனை மாத்திரை 1

 
கோரோசனை மாத்திரை 2




 மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...